சங்கீதம் • செவிக்கு இன்பத்தை தருவது சங்கீதமேயாகும். லலித கலைகளுள் இது முதன்மையானது. பண்டிதர் பாமரர், விலங்குகள், பறவைகள் யாவற்றையும் பரவசப்படுத்தும் தன்மை சங்கீதத்திற்கு உண்டு. • சங்கீதத்தை பயில்வதனால் அன்பு, அடக்கம், பக்தி, சாந்தி போன்ற நற் குணங்களும் அறிவு, புத்திக்கூர்மை, கற்பனாசக்தி, போன்ற திறன்களும் விருத்தியாகின்றது. • இறைவனை ஆராதித்து நாம் பரவசமடைய உன்னத மார்க்கமாக சங்கீதம் போற்றப்படுகின்றது. நம் ஆன்ரோர்கள் நவ வித பக்தி மார்கங்களில் ஷ்ரவணம் என நாம் கேட்கும் சங்கீதத்தையும் கீர்த்தனம் என நாம் இசைக்கும் சங்கீதத்தையும் முதன்மையாக கூறியுள்ளனர். சிவபெருமான் கையில் டமருகம் ஒலியின் பிறப்பினை குறிப்புணர்த்துவதுபோல கண்ணபிரான் கையில் குழலும், சரஸ்வதி கையில் வீணையும் இருப்பதை நாம் காணலாம். இவை இசையின் தெய்வீக தொடர்பாட்டினை குறித்து நிற்கின்றது. • உலகின் பல்வேறு இன மற்றும் மொழிபேசும் மக்களிடையேயும் பாரம்பரியமான கலாச்சார பரம்பல்கள் காணப்படுகின்றது. அவற்றுள் அவரவர் கலாச்சார பிரதிமையாக இசை திகழ்கிறது. இதனால் தற்கால உலகில் கர்நாடகம் ஹிந்துஸ்தான், அரேபியா, எகிப்த், பெல்ஜியம், ஜாஸ், ரொக்,...